பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா இளைய தளபதியுடன் இணைந்து 2002ஆம் ஆண்டு தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் பாலிவுட் பக்கம் சென்று அங்குள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர் அமெரிக்காவில் பாடகராக இருந்து வந்த நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காததால் ஒரு வடக்கை தாயின் மூலம் ஒரு குழந்தையையும் பெற்று கொண்டார் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் தற்போது தான் ஏன் வடக்கை தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டேன் என்ற தகவலை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது எனக்கு திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என்பதால் மருத்துவ ரீதியாக பல சோதனைகளை செய்து பார்த்தேன் அதில் எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள பல சிக்கல்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள் ஆனால் அதுபற்றி தெரியாத பலரும் என்னை தவறாக பேசினார்கள் அது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. இருந்தாலும் நான் அதை பற்றியெல்லாம் சிறிதும் கண்டுகொள்ளாமல் ஒரு வடக்கை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினேன் அதனால் தான் அவரின் மூலம் நான் தாய்மை அடைந்துள்ளேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.
தற்போது நாற்பது வயதாகும் பிரியங்கா சோப்ரா தன்னுடைய குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார் தனது குழந்தையும் அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை தனது இணைய பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
View this post on Instagram